Latest Updates News | Hot News | Sports News

15 April 2011

பிரபுதேவா நயந்தாராவுக்கு நடுவில் ஹன்சிகா…?

நடிகர் பிரபுதேவா – நடிகை நயன்தாரா இடையேயான காதலில் முறிவு ஏற்பட்டு விட்டதாகவும், நடிகை ஹன்சிகா மோத்வானி – பிரபுதேவா இடையே காதல் அரும்பி விட்டதாகவும் கோடம்பாக்கத்தில் திடீர் பரபரப்பு செய்தியொன்று உலவ ஆரம்பித்துள்ளது. 
பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் எங்கேயும் காதல் படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி நாயகியாக நடித்துள்ளார். இப்ப‌டத்தின் சூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே ஹன்சிகாவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் என்ற கிசுகிசு கிளம்பியது. அதனை வழக்கம்போலவே ஹன்சிகா மறுத்தார்; பிரபுதேவா மவுனம் காத்தார். இப்போது சூட்டிங் முடிந்து ரீலிசுக்கு தயாராகியுள்ள நிலையில் மீண்டும் கிசுகிசு கிளம்பியுள்ளது.

சமீபத்தில் இந்த புது ஜோடியை ஹோட்டலில் கையும் களவுமாக பிடித்த நயன்தாரா, ஹன்சிகா கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்திலும் பிரபுதேவா வழக்கம்போல மவுனம் காக்கிறார். (ஏற்கனவே நயன்தாராவுடன் காதல் அரும்பியபோதும் சார் இப்படித்தானே மவுனம் காத்தார்). ஆனால் ‌‌கோலிவுட்டில் ‌தமன்னாவின் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கோடம்பாக்கத்திற்கு வந்திருக்கும் ஹன்சிகா, தனது எதிர்கால சினிமா வாழ்க்கையை இந்த காதல் கிசுகிசு பாதிக்கும் என நினைத்து அதிரடியாக விளக்கமொன்றை கொடுத்திருக்கிறார். அம்மணி அளித்துள்ள பேட்டியில், “எனக்கு இப்போதுதான் 19 வயசாகிறது. அதுக்குள்ள இன்னொருத்தர் கணவருடன் இருந்தேன் என்று எழுதுவது ரொம்ப ஓவர். நயன்தாராவுக்கு துரோகம் இழைக்க கனவிலும் நினைக்கவில்லை. பிரபு தேவாவை நான் மிகவும் மதிக்கிறேன். ஒரு குரு என்பதையும் தாண்டி, எனக்கு அண்ணன் மாதிரி ஸ்தானத்தில் அவரை வைத்துள்ளேன். நயன்தாராவை நான் பாரீஸில் சந்தித்ததோடு சரி. சமீபத்தில் அவரைப் பார்க்கவே இல்லை, என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment